பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் பிரம்மோற்சவ விழா !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2014 12:09
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. மறுநாள் காலை ஹஸ்த நஷத்திரம் கன்யா லக்னத்தில் த்வஜாரோஹணம், திருப்பல்லக்கு, மதியம் சிறப்பு திருமஞ்சனம் ததியாராதனம், இரவு ஹம்ச வாகனத்திலும் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஹனுமந்த வாகனத்திலும், நேற்று இரவு சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று காலை திருப்பல்லக்கு பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் சிறப்பு திருமஞ்சனமும், இரவு தங்க கருடத்தில் உற்சவமும் நடக்கிறது. நாளை காலை திருப்பல்லக்கும், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. தொடர்ந்து 1ம் தேதி புஷ்ப பல்லக்கு, 2ம் தேதி குதிரை வாகனம், 6ம் தேதி சந்திரபிரபை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.