நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது. ஏம்பலம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் மாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, திருமஞ்சனம் நடந்து வருகிறது. நேற்று இரவு 7.00 மணிக்கு சுவாமி சன்னதி புறப்பாடு மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நல்லாத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.