Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜலதர மாரியம்மன் கோவிலில் யாகசாலை ... உத்தமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாராக மாறிய கோவில் தெப்பக்குளம்: அறநிலையத்துறை அலட்சியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2014
01:10

ஓசூர்: ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பழமை வாய்ந்த சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ளது. தேர்த்திருவிழா காலங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், தெப்பக்குளத்தில், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு விட்டு, சந்திரசூடேஸ்வரரை வழிபட செல்வது வழக்கம்.பல ஆண்டுகள் பழமையான இந்த தெப்பக்குளம், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால், சரியாக பராமரிக்கப்படுவதில்லை. தெப்பக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை, குடிமகன்கள், பாராக மாற்றி வருகின்றனர். மது அருந்தி விட்டு, பாட்டில்களை கோவில் குளத்தில் வீசுவதால், குளத்தில் நீராடும் பக்தர்கள் காலை உடைந்த மது பாட்டில்கள், பதம் பார்க்கின்றன. மேலும், குடிமகன்கள் சிலர், தெப்பக்குள படிக்கட்டுகளில், மது பாட்டில்களை உடைத்து வருகின்றனர்.தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு, பல ஆண்டுகள் ஆவதால், தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு, தெப்பக்குளத்தை தூர்வாரி, புதிய தண்ணீர் நிரம்ப வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தெப்பக்குளத்தை பராமரிக்க வேண்டிய ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அலட்சியமாக இருக்கின்றனர். இதை, மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என, பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar