பதிவு செய்த நாள்
07
அக்
2014
12:10
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விரு த்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை ஆழத்து விநாயகர், விரு த்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் போன்ற 12 சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.