Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலோகநாதர் கோவிலில் ... மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா! மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கோவிலில் திருடப்பட்ட சிலைகள் மீட்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 அக்
2014
11:10

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திருடப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளை போலீசார் மீட்டனர். அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமம் மற்றும் விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களை சேர்ந்த, சுவாமி சிலைகளை கடத்தி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்று, கோடிகளை குவித்து வந்த, சுபாஷ் கபூர் கைதுக்கு பின், தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவங்கள் குறையத் துவங்கின. ஆனால், சில தினங்களுக்கு முன், கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தலை தூக்கியதால், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஒரு கோவிலை சேர்ந்த, முருகன், வள்ளி, தெய்வானை, மயில், திருவாச்சி, பீடம் ஆகியவற்றை திருடிக் கொண்டு, ஒரு கும்பல், மதுரை அழகர் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக, தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., சுந்தரம் தலைமையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், திருநெல்வேலியை சேர்ந்த சிவா, மதுரையை சேர்ந்த தினேஷ், அப்துல் அஜீஸ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, மூன்று சிலைகள், திருவாச்சி மற்றும் பீடத்தை பறிமுதல் செய்தனர். இந்த சிலை கடத்தல் சம்பவத்திற்கு, மூளையாக இருந்து செயல்பட்ட, திருநெல்வேலியை சேர்ந்த குட்டி என்பவன் தலைமறைவாகி விட்டான். அவனை கைது செய்தால் தான், இன்னும் எத்தனை சிலைகள் திருடப்பட்டுள்ளன, யார், யாரிடம் விற்பனை செய்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும் என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar