பதிவு செய்த நாள்
18
அக்
2014
11:10
கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜை விழா, அக்., 28ல் நடக்க உள்ளது.கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, பிரதோஷம், கார்த்திகை, மாதாந்திர மூல நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். ஆண்டுதோறும் ஐப்பசி மூல நட்சத்திரத்தில் குரு பூஜை விழா நடக்கும். காசி, பிரம்மபுத்திரா, அமர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சாதுக்கள் இந்த பூஜையில் பங்கேற்க வருவர். இந்த ஆண்டிற்கான குருபூஜை அக்., 28 ல் நடக்க உள்ளது. இதற்காக மாலையணிந்த பக்தர்கள் சிவனூரணி, திருமலைக்கேணி, சுருளி, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சதுரகிரியிலிருந்து புனிதநீர் எடுத்து வர உள்ளனர். அக்., 26 ல் தீர்த்தக்குடங்கள் அழைப்பு நடக்கும். அக்., 27 மாலை 4 மணிமுதல் தொடர்ந்து தீர்த்தாபிஷேகம் நடைபெறும். அக்., 28 ல் 108 படி பாலாபிஷேகம் செய்யப்பட்டு குருபூஜை நடத்தப்படும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.