Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ... அம்மன் கண் திறந்ததாக செங்கல்பட்டில் பரபரப்பு! அம்மன் கண் திறந்ததாக செங்கல்பட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர், பழநியில் இன்று சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2014
10:10

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவில் இன்று மாலை 4:30 மணிக்கு ’சூரசம்ஹார’ நிகழ்ச்சி நடக்கிறது.முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில், கந்த சஷ்டி விழா அக்., 24ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ’சூரசம்ஹாரம்’ இன்று நடக்கிறது. இன்று மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்; தொடர்ந்து ’முதல் தலைபடுதல்’ நிகழ்ச்சி நடக்கும்.

Default Image
Next News

நாளை (எட்டாம் நாள்) அதிகாலை 5 மணிக்கு தேவசேனாம்பாள் தபசுக்காட்சிக்கு எழுந்தருளல், மாலை 6:30 க்கு சுவாமி எழுந்தருளல், அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி ஆகியவை நடக்கும்; இரவு, திருக்கல்யாணம் நடக்கிறது.ஒன்பதாம் நாளில், சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் நகர் வலம் வருதல், அடுத்த மூன்று நாட்களுக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கும். நவ., 4 ல் விழா நிறைவு பெறுகிறது.

* பழநி மலைக்கோயிலில் அக்.,24 ல் காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி அக்.,30 வரை நடக்கிறது. நாளை, சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4:30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம் நடக்கிறது.

தங்கரதம் நிறுத்தம்: வழக்கமாக மாலை 5:30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை பிற்பகல் 1:30 மணிக்கு நடக்கிறது. பிற்பகல் 2:30 மணிக்கு சின்னக்குமார சுவாமி, அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கியவுடன் சன்னதி நடை சாத்தப்படும். இதனால் தங்கரதப் புறப்பாடு கிடையாது.

சூரசம்ஹாரம்: திருஆவினன்குடியில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு நான்கு கிரிவீதிகளிலும் தாரகாசூரன், பானு கோபன்சூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருக்கல்யாணம்: நாளை காலை 10 மணிக்கு மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி தேவசேனாவிற்கும்; இரவு 7 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக் குமாரசுவாமி, வள்ளி,தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar