Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ராஜ ... மணவாள மாமுனிகள்  உற்சவம்  பூர்த்தி விழா! மணவாள மாமுனிகள் உற்சவம் பூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2014
11:10

பாரிமுனை: கந்த சஷ்டியை முன்னிட்டு, இன்று கந்தகோட்டம், வடபழனி கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில், கடந்த வாரம் முதல், சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

Default Image
Next News

கந்தகோட்டத்தில்... நேற்று கந்தகோட்டம் என்றழைக்கப்படும், முத்துகுமாரசுவாமி கோவிலில், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடைபெற்றது. மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், சஷ்டியை முன்னிட்டு, நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது. ஆறுமுக சுவாமி அலங்காரத்துடன், உற்சவ முருகன் கம்பீரமாக காட்சியளித்தார். இன்று மாலை 6:00 மணி முதல் கந்தகோட்டம் கோவில் சார்பில், பாரிமுனை மாலை அங்காடி சாலையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், இன்று மதியம் 12:00 மணிக்கு பால்காவடி ஊர்வலம், பால்குட அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து உற்சவ முருகன் மயில் வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

சிறுவாபுரியில்...: சிறுவாபுரி, முருகன் கோவிலில், கடந்த, 24ம் தேதி, கந்த சஷ்டி விழா துவங்கியது. கந்தசஷ்டி ஐந்தாம் நாள் வேல் வாங்கும் விழாவை முன்னிட்டு, நேற்று, முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெற்றன. மாலையில் நடைபெற்ற வேல் வாங்கும் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மயில் வாகனத்தில் எம்பெருமான் முருகன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை, சிறுவாபுரி முருகன் கோவிலில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது.

திருவான்மியூரில்...: திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 7:30 முதல் மாலை 5:30 மணிவரை ஏக தின லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. இன்று மாலை 6:30 மணிக்கு சூரசம்ஹார விழாவும், நாளை இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்க உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar