பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று மாலை சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதன் படி தரைப்பாலம் அருகில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில், காலை சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது. மாலை 4 மணிக்கு சுப்பிரமணியசுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா வருவார். பின்னர் 6 மணிக்கு கோயில் முன்பாக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 11 மணி முதல் 12 மணிக்குள், முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு பட்டணப்பிரவேசம் நடக்கவுள்ளது. இதே போல் இரவு 7 மணிக்கு பாரதிநகர் செல்வகுமரன் கோயில் முன்பாக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.