பதிவு செய்த நாள்
30
அக்
2014
12:10
மயிலம்: மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவில், நேற்று இரவு, பத்மாசூரனை முருகன் சம்ஹாரம் செய்யும், சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில் அமைந் துள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி விழா துவங்கி விமர்சையாக நடந்து வருகிறது. நேற்று சூரசம்ஹாரத்தையொட்டி, காலை 6:௦௦ மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:௦௦ மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சி றப்பு அபிஷேகம் நடந்தது. வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று மாலை கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். குழந்தை வரம் வேண்டி பெண்கள் மவுன விரதம் இருந்தனர். நேற்றிரவு 9:30 மணியளவில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, பத்மாசூரன் மற்றும் அவனது தம்பிகளை முருகன் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, மயிலம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தி ருந்தார்.