Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சென்னிமலை மாரியம்மன் கோவிலில் 6ம் ... ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிக்கு ரூ.8 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தியூர் குருநாதஸ்வாமி கோவிலில் 400 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
12:11

அந்தியூர் : அந்தியூர் குருநாதஸ்வாமி கோவிலில், 400 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது. அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ளது குருநாத ஸ்வாமி கோவில். ஆண்டுதோறும் ஆடிமாதம் தேர் திருவிழா நடக்கும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் அப்போது ஒரு வாரம் வரை மாடு, குதிரை சந்தைகள் நடக்கும்.கோவிலில் குருநாத ஸ்வாமி, பெருமாள், காமாட்சி அம்மனுக்கு சன்னதிகள் உள்ளன. பாண்டிய மன்னர் காலத்தில் இக்கோவில் உருவானதாக கருதப்படுகிறது. 400 ஆண்டுக்கு முற்பட்டது. கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை, அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் முடிவு செய்தனர்.அதன்படி மூன்று ஆண்டுக்கு முன் திருப்பணி துவங்கியது. பொதுமக்கள் பங்களிப்புடன் 35 லட்ச ரூபாய் மதிப்பில் பிரகார மண்டபம், சபா மண்டபம் கட்டப்பட்டுள்ளது.குருநாத ஸ்வாமி, பெருமாள் மற்றும் காமாட்சி அம்மனுக்கு தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கும்பகோணம், நன்னிலம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஸ்தபதியர் வரவழைக்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட சிற்பிகளை கொண்டு திருப்பணி நடந்தது.அமெரிக்க வாழ் இந்தியரான, அந்தியூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் ரூ.50 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில், குருநாத ஸ்வாமிக்கு மூன்று நிலை, பெருமாள், காமட்சிஅம்மனுக்கு இரண்டு நிலை கொண்ட கோபுர விமானங்கள் அமைக்கும் பணி நடந்துள்ளது.திருப்பணிகள் நிறைவு பெறும் தருணத்தில் உள்ளது. யாக சாலை பூஜை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது.வரும் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், அறங்காவலர் சாந்தப்பன் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar