Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! குமாரநல்லூர் கோவிலை சீரமைக்க நிர்வாகம் முடிவு! குமாரநல்லூர் கோவிலை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளி வாசலை குல தெய்வமாக வணங்கும் இந்துக்கள்: தீக்குழி இறங்கி நேர்த்தி கடன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 நவ
2014
11:11

திருப்புவனம்: திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் பள்ளிவாசலை இந்துக்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். முதுவன்திடல் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வந்தனர். இந்து, முஸ்லிம் பண்டிகையை ஒற்றுமையாக கொண்டாடி வந்தனர். இந்துக்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செழிக்கவும் ஊர்மக்கள் நலமுடன் வாழவும் பள்ளிவாசலில் வேண்டுவது  வழக்கம். விதைப்பின் போது நெல் நாற்றுகளை பள்ளிவாசலில் வைத்து பாத்தியா ஓதி அதன்பின் நடவு செய்துவந்தனர்.  அதுபோல அறுவடையின்  போது விளைந்த நெற்கதிர்களை பள்ளி வாசலில் வைத்து பாத்திய ஓதி வேண்டுதலை  நிறைவேற்றுவது வழக்கம். மொகரம் நாளன்று பள்ளிவாசல்  முன் தீ வார்த்து ஆண்கள் தீக்குழி இறங்கியும், பெண்கள் தீக்கங்குகளை தலைமீது வாரி போட்டும் நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். ஆண்கள்,  சிறுவர்கள் பத்து நாட்கள் முன் காப்பு கட்டி விரதமிருந்து மொகரம் அன்று அதிகாலை கண்மாயில் நீராடி விட்டு வரிசையாக தீக்குழி இற ங்குகின்றனர். தீக்குழி இறங்கும் பக்தர்களை முஸ்லிம்கள் திருநீறு பூசி ஆசிர்வதிக்கின்றனர். பெண்கள் தீக்கங்குகளை தலைமீது வாரி போட்டு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் தங்களை நோய் நொடி அண்டாது என நம்புகின்றனர். பின் முஸ்லிம் சப்பர ஊர்வலம்  நடைபெறுகிறது. வேண்டுதல் இருக்கும் பக்தர்கள் சப்பரத்தை கிராமம் முழுவதும் துõக்கி கொண்டு உலா வருகின்றனர். பின் பக்தர்களுக்கு சர்க்கரை, பானக்கரம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar