Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீப திருவிழா பத்திரிக்கை வினியோகம்; ... நித்ய கல்யாண பெருமாள்கோவிலில் பவித்ரோத்சவம்! நித்ய கல்யாண பெருமாள்கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
14 லட்சம் செலவில் வெள்ளி மயில் வாகனம்; சென்னிமலை முருகனுக்கு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 நவ
2014
12:11

சென்னிமலை : சென்னிமலை முருகனுக்கு, 14 லட்சம் ரூபாய் செலவில், வெள்ளி மயில் வாகனம், ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.

ஸ்ரீ முருகன் மங்கள வார விழாக்குழு, சென்னிமலையில் கடந்த, 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில், சென்னிமலை முருகன் கோவிலில், பல பணிகள் செய்து வருகின்றனர். குறிப்பாக, வேங்கை மர தேர் செய்து வழங்கினர்.அதை வாரம் தோறும், செவ்வாய்கிழமை இரவு, ரத ஊர்வலம் நடத்தி வருகின்றனர். வாரம் தோறும் இந்த ரத ஊர்வலம் காண, மலைகோவிலில் அதிகபடியான பக்தர்கள் குவிகின்றனர். இவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.தற்போது, 14 லட்சம் ரூபாய் செலவில், 22.5 கிலோ வெள்ளியை பயன்படுத்தி, வெள்ளி மயில் வாகனம் குடை செய்து கொடுத்துள்ளனர்.இதை திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் ஸ்ரீசெல்வவிநாயக சிற்ப கலை கூடத்தை சேர்ந்த சிற்பிகள், வடிவமைத்துள்ளனர்.

இதை கோவிலுக்கு ஒப்படைத்தல், ஸ்ரீமுருகன் மங்கள வாரவிழாக்குழு, 21ம் ஆண்டு தொடக்க விழா, புதிய வெள்ளி மயில் வாகன புறப்பாடு, வெள்ளோட்ட விழா நடந்தது.நேற்று முன்தினம், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, கொடுமுடி சென்று, காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை, 7 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து, தீர்த்த கலசங்களுடன் வெள்ளி மயில்வாகனம், மலைக்கு மேளதாளங்களுடன் எடுத்து செல்லப்பட்டது. காலை, 11 மணிக்கு மலை கோவிலில் சிறப்பு யாகம், பூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. பின், மஹாஅபிஷேகம் முருகப்பெருமானுக்கு நடந்தது.மதியம், 1 மணிக்கு, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடும், வெள்ளோட்டமும் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ முருகன் மங்கள வார விழாக்குழு வினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar