காரைக்கால்:காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் நடந்து வருகிறது.காரைக்கால் பாரதியார் சாலையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாதத்தையொட்டி, 4 நாட்கள் நடைபெறும் பவித்ரோத்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு புண்யாஹசனம், பவித்ர பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், கும்பபூஜை, சக்கரத்தாழ்வார், பூர்ணாஹூதி நடந்தது.மாலை கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, யுக்த ஹோமம் நடந்தது. முன்னதாக, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பவித்ரோத்சவத்தையொட்டி தினமும் மாலை 5:00 மணிக்கு பெருமாள் வீதி உலா நடந்து வருகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்யகல்யாண பக்த ஜனசபாவினர் செய்து வருகின்றனர்.