பதிவு செய்த நாள்
05
நவ
2014
12:11
பரங்கிப்பேட்டை அருகே பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, சற்குரு சித்தர் சுவாமி சிலை, ஓங்காரநந்தா சித்தர் சுவாமி சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் புத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, சற்குரு சித்தர் சிலை, பரங்கிப்பேட்டையில் வாழ்ந்த அனுமான் சுவாமி என்று அழைக்கப்படும் ஓங்காரநந்தா சித்தர் சுவாமி ஆகியோருக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அதையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் அங்குரார்பணம், ரஷாபந்தனம், கோ பூஜை, முதல்கால யாக பூஜை, ஜெப பாராயணம், தீபாராதனை நடந்தது.கும்பாபிஷேக தினமான நேற்று இரண்டாம் கால யாக பூஜை, ஜெப
பாராயணம், சாந்தி ஹோமம், யாத்ராதானமும் தொடர்ந்து கடம்புறப்பாடாகி காலை 5:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பிஷேகத்தில் பு.முட்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரமம் சீடர்கள் லட்சுமிபாய், கோடீஸ்வரானந்தா, சீனு என்கிற ராமதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.