பதிவு செய்த நாள்
05
நவ
2014
12:11
பள்ளிப்பட்டு: பாழடைந்து கிடந்த, ஈச்சம்பாடி கைலாசநாதர் கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்துள்ளது ஈச்சம்பாடி கிராமம். ஈசனை பாடி என்ற பெயர், நாளடைவில் ஈச்சம்பாடி என, வழங்கலாயிற்று.இங்கு கைலாசநாதர் கோவில் உள்ளது. அந்த கோவில், பல ஆண்டுகளாக ஒரு காலை பூஜைக்கும் வழியின்றி, பாழடைந்து கிடக்கிறது.இதுகுறித்து, கடந்த ஜன., 8ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.கோவில் மேல்தளம் மற்றும் விமானத்தின்மீது வளர்ந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.முன் மண்டபத்தின் தரை, கான்கிரீட் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.