பதிவு செய்த நாள்
05
நவ
2014
01:11
காரிமங்கலம் : காரிமங்கலம், மலைக்கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது.காரிமங்கலம், ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலையில் ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும், பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடத்தில் உள்ள ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், மாலையில் அன்னாபிஷேகமும், பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
தர்மபுரி, கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அரூர் தீர்த்தகீரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், அடிலம் அடில நாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், மாலையில் அன்னாபிஷேகம் நடக்கிறது.