விருத்தாசலம்: கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதேபோல், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி, வேடப்பர் சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.