திருப்பதி: இலங்கை பிரதமர் ஜெயரத்னே, மனைவி அனுலாயப்பாவுடன், நேற்று காலை, திருமலைக்கு வந்தார். அவரை, தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து அளித்து வரவேற்று, கோவில் முன் வாசல் வழியாக, ஏழுமலையானை தரிசிக்க அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களுக்கு, ரங்கநா யகர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதமும், சிறப்புப் பிரசாதங்களும், ஏழுமலையான் படமும் வழங்கப்பட்டது.