திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நட்சத்திரத்தை வைத்து ஒரு நாள் முன்னதாக நேற்று முன்தினம் இரவு அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனைகள், அன்னம், பழங்களால் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பூஜைகளை ராதாகுருக்கள், பாலாஜி, கணேசன் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள், அபிஷேக அன்னம் வழங்கப்பட்டது. கோவிலில் உள்ள சுயம்பு மூர்த்தியான திரிபுர சுந்தரி சமேத திருமூலநாதர் பெருமானுக்கும் மகா அன்னதான அபிஷேகம் நடந்தது.