விழுப்புரம்: சிறுவந்தாடு லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் கருடசேவை விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கனகவல்லி தாய õர் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி, மூலவர் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கனகவள்ளி தாயாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் அலங்காரம் செய்ய ப்பட்டு, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி உள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய் தனர்.