வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த துர்க்கை அம்மன் பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள துர்க்கை அம்மன் கோவிலில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது.ஐப்பசி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான நேற்றுமுன்தினம் மாலை 4.00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.