பதிவு செய்த நாள்
14
நவ
2014
11:11
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று, மூலவருக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று, பால்குட அபிஷேகம் நடந்தது. விழாவை ஒட்டி, 108 பால்குடங்களை பெண்கள் தலையில் சுமந்தவாறு, ஊர்வலமாக கோவில் வளாகம் அடைந்தனர். தொடர்ந்து, மூலவருக்கு, காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பஜனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.