வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, இந்த ஆண்டு முதல் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமையும், 108 சங்காபிேஷகமும், மஹா ம்ருத்யுசூஜய ேஹாமமும் நடைபெறுகிறது.நேற்றுமுன்தினம் மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற சங்காபிேஷக விழாவில் காசிவிஸ்வநாதருக்கு, சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. பின்னர் 108 சங்காபிேஷகம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.