பதிவு செய்த நாள்
27
நவ
2014
12:11
திருவள்ளூர்: சிவா - விஷ்ணு கோவிலில், கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, டிச.,1ம் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது,திருவள்ளூர் பூங்கா நகரில் அமைந்துள்ள சிவா - விஷ்ணு கோவிலில், கார்த்திகை மாத சோமவார வழிபாடு, கடந்த இரு வாரங்களில் நடைபெற்றது. வரும் டிச.,1ம் தேதி, மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, மாலை 4:00 மணிக்கு, புஷ்பவனேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மாலை 6:30 மணிக்கு, புஷ்பவனேஸ்வரர் திருத்தேரில் ஆலய உலா நடைபெறுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரி உடனுறை அருணாசல ஈஸ்வரர் கோவிலில், டிச.,1ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, சங்காபிஷேகமும், 1,008 திருமுறை அர்ச்சனையும் நடைபெறுகிறது.