கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலையில் பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அய்யப்பன் கோவில் முன்பு 3 கலசங்களை ஆவாஹனம் செய்து யாகம் நடத்தினர். மூலவர், உற்சவர் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம் நடத்தி, அன்னதானம் வழங்கினர். பூஜை ஏற்பாடுகளை வேலு தலைமையிலான பக்தர்கள் செய்தனர். வேத சிவாகம முறைப்படி அம்பிகேஸ்வரர், குருமூர்த்தி சிவம் பூஜைகளை செய்து வைத்தனர்.