பதிவு செய்த நாள்
27
நவ
2014
12:11
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நேற்று உண்டியல் எண்ணப்பட்டது.சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில், முக்கிய கோவிலாகும். ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய் கிழமை, இக்கோவிலில் குண்டம் விழா நடப்பது வழக்கம்.இந்த விழாவில், தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்வது வழக்கம்.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பல்வேறு கோரிக்கைகளை அம்மனிடம் வேண்டி, இங்குள்ள உண்டியலில் காசு, பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை செலுத்துவர்.
பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. 31லட்சத்து 51,732 ரூபாய் ரொக்கம், 273 கிராம் தங்கம், 576 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் மூலம் வசூல் ஆனது என இணை ஆணையர் இளம்பரிதி தெரிவித்தார்.