பதிவு செய்த நாள்
28
நவ
2014
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. டிச., 5 மாலை 6.15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும்.
சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பல்வகை அபிஷேகம் நடந்தது.டிச., 5 வரை தினமும் பல்வகை வாகனங்களில் சுவாமி வீதி உலா வருகிறார். டிச.,2ல் சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலையும், டிச.,3ல் கங்காளநாதர் சுவாமி புறப்பாடும், டிச.,4ல் பட்டாபிஷேகம், டிச.,5ல் தேரோட்டம், மாலையில் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. டிச., 6ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.