பதிவு செய்த நாள்
28
நவ
2014
01:11
வடபழனி : வடபழனி முருகன் கோவிலில், வரும், ௫ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. வடபழனி, முருகன் கோவிலில், வரும் டிச., 4ம் தேதி மாலை 4:௦௦ மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். 5ம் தேதி, மாலை 6:௦௦ மணிக்கு, 27 நட்சத்திரங்கள் அடிப்படையில், 27 மண் அகல் விளக்குகள், கொடி மரத்தின் எதிரில் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.தொடர்ந்து, திருக்கோவிலின் நான்கு கோபுரங்களின் உச்சி, சன்னிதிகள், திருக்குளம், உள்ளிட்டவற்றில் தனித்தனியாக தீபம் ஏற்றப்பட்டு, இரவு, 7:௦௦ மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன், சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடக்கிறது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கோவில் ராஜகோபுரத்தின் எதிரில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.