திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் டிச. 5ல் மலைமீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திற்கு நெய் வழங்க உபயதாரர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
டிச. 5 அன்று மாலை 6.15 மணிக்கு மலைமேல் 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரத்தால் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இப்பொருட்கள் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது. தீபத்திற்கு நெய் உபயமாக வழங்க விரும்பும் பக்தர்கள் விருப்பதிற்கு ஏற்ற அளவில் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி ரசீது பெற்றுக் கொள்ளலாம். என கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன் தெரிவித்தார்.