பதிவு செய்த நாள்
29
நவ
2014
11:11
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சத்துரு சம்கார யாகம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் ÷ காவிலில் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், 16 செல்வங்களும் பெறவும், கற்பதோஷம் நீங்கவும், புத்திர சந்தானம் பெறவும், கண் திருஷ்டி அகலவும் வேண்டி சத்துரு சம்கார யாகம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கடந்த 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்னிய வாகசானம், பஞ்ச கவ்வியம், வேதிகார்ச்சனை நடந்தது. 7:00 மணிக்கு சத்துரு சம்கார ஆறுமுக அர்ச்சனை, தீபாராதனையும், 8.00 மணிக்கு அக்னிகாரியம், திரிசதி ஹோமம் நடந்தது. நேற்று (28ம் தேதி) காலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, திரிசதி ஹோமம் நடந்தது. 7:00 மணிக்கு கலசாபிஷேகம், ராஜஅலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனையும், 10:15 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. யாகத்தில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.