பதிவு செய்த நாள்
29
நவ
2014
12:11
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, வாஸ்து பூஜை, யாகத்துடன் நேற்று துவங்கியது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் 1ல் நடக்கிறது. இதற்கான யாக சாலை பூஜை நேற்று துவங்கியது. வீரராகவப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுக்கு சிறப்பு பூஜை நடந்து, கலசம் மற்றும் கருடாழ்வார் பல்லக்கில் எழுந்தருளினர். பின், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் யாகம் நடந்தது. நாளை (30ம் தேதி) காலை 7.00 மணிக்கு, புதிய விமானங்கள் மற்றும் எம்பெருமான்களுக்கு சாந்தி ஹோமம், மகா அபிஷேகம் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு, 108 கலச மகா அபிஷேகம், யாக வேள்வி நடக்கிறது. டிச., 1ம் தேதி காலை 7.00 மணிக்கு சாந்தி ஹோமம், 9.00 மணிக்கு கலசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9.47 மணிக்கு, விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.22க்கு, மூலவர்களுக்கு கும்பாபிஷேகம், நடைபெறுகிறது. விழா பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன. திருப்பூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.