பொதுவாக சனீஸ்வரரை காக வாகனத்துடன் தரிசித்திப்பீர்கள். ஆனால், அவரே கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கருட வாகனத்துடன் காட்சி தருகிறார். சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. நவக்கிரகங்களுக்கு பிடித்தமான நிறத்தின் அடிப்படையில், இத்தலத்து சிவனுக்கு தினமும் ஒரு வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. உதாரணமாக, செவ்வாய்க்கிழமையில் சிவப்பு வஸ்திரமும், சனிக்கிழமையில் நீல வஸ்திரமும் அணிவிக்கப்படும்.