குமுளியில் ஐயப்ப பக்தர்களுக்கு ஊராட்சி மூலம் கூடுதல் வசதிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2014 12:11
மூணாறு: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர், இடுக்கி மாவட்டம் குமுளி வழியாக சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தால் குமுளி பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனை தவிர்க்கும் விதத்தில் குமுளி ஊராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமுளியில் உள்ள கேரள அரசு பஸ்ஸ்டாண்ட் அருகில் பக்தர்கள் தங்கிச் செல்லவும், ஓய்வு எடுக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குடி நீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள கழிவறையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தற்காலிகமாக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஊராட்சியின் உள்ளூர் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர் பொன்ராஜ் தெரிவித்தார்.வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் குமுளியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்டலம் மற்றும் மகரவிளக்கின் போது சபரிமலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் பயனடைவர்.