கீழக்கரை: கீழக்கரை அருகே அலவாய்க்கரைவாடி கிராமத்தில் உள்ள கருப்பட்டி முனீஸ்வரர் கோயில் என்ற இலந்தை மரக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ., 26 ல், முதற்கால யாகவேள்வியுடன் பூர்ணாகுதி, அங்குரார்பணம், யந்திர பிரதிஷ்டையுடன் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு சந்திரசேகர சாஸ்திரி, ரகுராமசந்திரன் சாஸ்திரி ஆகியோர் வேதமந்திரங்கள் முழங்க, புனிதநீரை கும்பத்தில் ஊற்றினர். பின்னர், மூலவரான கருப்பட்டி முனீஸ்வரர், விநாயகர், ஆஞ்சனேயர், பத்திரகாளி, கருப்பண்ணசுவாமிகள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா பரஞ்ஜோதி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.