திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் வழக்குரைத்த மண்டபத் தில் அய்யப்பா சேவா சங்கம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. கடந்த 18ம் தேதி முதல் அய்யப்பன் பூஜை துவங்கி, தினமும் மாலையில் அபிஷேகமும், பஜனையும் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சுவாமியை வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சிகாமணிராஜன், மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் சங்கர லிங்கம், நகர நிர்வாகிகள் சுந்தரம், சோமசுந்தரம், சுப்ரமணியன், வெங்கட்ராம சுரேஷ், கடலூர் மாவட்ட தலைவர் யாகமூர்த்தி, செயலாளர் சுவாமிநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.