மரக்காணம்: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி மரக்காணம் ஒன்றியத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. கார்த்திகை தீபம் அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணியில், மரக்காணம் ஒன்றியம் எம்.புதுப்பாக்கம் ஊராட்சி திருக்கனூர் கிராமத்தில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.