புதுச்சேரி: லாஸ்பேட்டை நாவற்குளம் ராஜகோபால் சுவாமி கோவிலில், முதலாம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், ருத்ர பாராயணம் நடந்தது. காலை 8:00 மணிக்கு கோ பூஜை, 9:30 மணிக்கு மகா அபிஷேகமும், 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.