Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயிலை சுற்றியுள்ள ... சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலில் 5,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2014
12:12

மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்யகல்யாண பெருமாள் கோவிலில், தொல்லியல் துறை பராமரிப்பு பணிக்காக, நேற்று பாலாயம் நடத்தப்பட்டது. சென்னை அடுத்த, திருவிடந்தை கிராமத்தில், நித்யகல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், 108 வைணவ தலங்களில், 62வது தலமாக விளங்குகிறது. மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடனும், உற்சவர் நித்யகல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடனும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

காலவ முனிவரின் 360 மகள்களை, தினம் ஒரு மகள் வீதம், இறைவனே திருமணம் செய்தும், அவர்களை ஒருவராக்கி, தன் இடதுபுறம் இருத்தி, காட்சியளித்ததும், இத்தல வரலாறு. இதையடுத்து, திருமணத் தடை, மகப்பேறு ஆகிய தோஷ பரிகார தலமாக புகழ்பெற்றது. இக்கோவில், வழிபாடு அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை, பாரம்பரிய கோவில் அடிப்படையில், இந்திய தொல்லியல் துறை என, இரு துறைகளின் பொறுப்பிலும் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், அறநிலையத்துறை சார்பில், இங்கு திருப்பணிகள் செய்து, 2005ம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அடுத்த கும்பாபிஷேகத்திற்கு, இரு ஆண்டுகள் உள்ள நிலையில், தொல்லியல் துறை சார்பில், கோவிலை ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்துதல் உட்பட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையடுத்து, இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தினர், தொல்லியல் துறை பராமரிப்பை திருப்பணியாக கருதி, கடந்த 29ம் தேதி இரவு துவங்கி, நேற்று காலை வரை, சுவாமிகளுக்கு நான்கு கால யாகசாலை வழிபாடு நடத்தி, நேற்று காலை 10:30 மணிக்கு, பாலாலயம் நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar