திருவதிகை: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 3 வது திங்கட்கிழமையை முன்னிட்டு சோமவார பூஜை நடந்தது. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.