நாமக்கல்: நாமக்கல் ஏகாம்பரஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் புதிய வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. முன்னதாக வெள்ளி கவசத்தை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் ஏகாம்பரஸ்வரருக்கும், நந்தியம் பெருமானுக்கும் வெள்ளி கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.