Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொங்கு சனீஸ்வரர்கோவிலில் டிச.,16 ஆம் ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் ஐந்து நாட்களுக்கு நிற்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2014
03:12

திருச்சி:வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி வரும், 29 ம் தேதி முதல் ஜனவரி மாதம், 5 ம் தேதி வரை, வைகை எக்ஸ்பிரஸ் ரயில், ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதிக்கு அடுத்தபடியாக, தமிழகத்திலுள்ள வைணவ தளங்களில் சிறப்பு பெற்றது, முதலாது திவ்யதேசமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும். நாள்தோறும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துசெல்லும் கோவிலாகும்.

இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக, தங்கும் இடம், அடிப்படை வசதிகள், உணவுக்கூடங்கள், பாதுகாப்பு உள்ளிட்வைகள் குறித்து, இரண்டு நாட்களுக்கு முன்பாக, மாவட்ட நிர்வாகம் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.தற்போது கோவிலில், 10.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருவதால், நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சுமார் இரண்டு லட்சம்பேர் தரிசனத்துக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம், ஸ்ரீரங்கத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்க முடிவுசெய்துள்ளனர். இதனிடையே, தென்னக ரயில்வே நிர்வாகம், வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு; சென்னையில் இருந்து, மதுரை செல்லும், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12635) மாலை, 6.02 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, ஒரு நிமிடம் நின்று, 6.03 மணிக்கு புறப்பட்டு செல்லும். எதிர்மார்க்கத்தில், மதுரையில் இருந்து சென்னை செல்லும், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12636) காலை, 9.17 மணிக்கு வந்து, ஒரு நிமிடம் நின்று விட்டு, 9.18 மணிக்கு புறப்பட்டு செல்லும்.வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும், 29ம் தேதி முதல், ஜனவரி மாதம் 5 ம் தேதி வரை, ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar