புதுச்சேரி: குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், இன்று 108 சங்காபிஷேகம் நடக்கிறது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், கார்த்திகை மாத 4வது சோமவாரத்தை முன்னிட்டு, இன்று (8 ம் தேதி) 108 சங்காபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு சங்காபிஷேகம், 11:00 மணிக்கு மகா தீபாரதனையும் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.