பதிவு செய்த நாள்
09
டிச
2014
12:12
திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் இம்மாதம் 16ம்தேதி சனிபெயர்ச்சி விழா நடக்கிறது. பரிகார ராசியினர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிகாட்டில் அக்னிபகவான், சிவனை பூஜித்தமையால், அக்னி வனம் எனவும், சுவாமி அக்னீஸ்வரர், அக்னிவன திருக்கொள் ளிக்காட்டார் எனவும் அழைக்க ப்படுறார். இக்கோவில் சம்ந்தர் மற்றும் நாவுக்க ரசரால் பாடல் பெற்றது. இக்கோவிலில் ஈசன், மகாலட்சுமி அம்பாளுடன், ஸ்தானத்தில் கையில் கலப் பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனீஸ்வரனாக அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள ஈசனை வணங்கினால், நவக்கிரங்களின் தாக்கம் மறைந்தும்,குறைந்தும் நன்மை உண் டாகும் என்பதால் பல்வேறுப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நவக்கிரகங்களும் தமது வக்ரகுணம் ஒழித்து ’ப’ வடிவில் அருள்வதும், பொங்கு சனீஸ்வர பகவா னும், பைரவரும் எதிர், எதிர் சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். இக் கோவிலில் வரும் 16ம்தேதி பிற்பகல் 2.43 மணி க்கு சனீஸ்வரபகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனைத்தொடர்ந்து சுவாமிக்கும், பொங்கு சனீஸ் வரருக்கும் சிறப்பு வேள்வி மற்றும் அபிஷேகம் நடக்கிறது. எனவே மேஷம் (அஷ்ட்டமசனி),சிம்மம்(அர்த்தாஷ்ட்டமசனி) துலாம்(பாத சனி), தனுசு(ஏழரைசனி), விருச்சிகம்(ஜென்மசனி) துவங்குவததால் இந்த ராசி காரர்கள் பரி காரம் செய்து கொள்ளலாம். மே லும் தொடர்புக்கு கோவில் நிர்வாகத்தை 97913-66216 என்ற கைபேசில் தொடர்பு கொள்ளலாம்.