Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மருவத்தூருக்கு இருமுடி பயணம் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கும்பாபிஷேகங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2014
01:12

பரமக்குடி : பரமக்குடி, முதுகுளத்தூர், கீழக்கரை ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் அரசமரத்தடியில் உள்ள ஸ்ரீசங்கர விநாயகர், வாழைத்தோப்பு முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நடந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிச., 9 ல் மாலை 5:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, அனுக்கை, கணபதி பூஜை, யாக சாலை பூஜை நடந்தன. நேற்று காலை 7:00 மணி முதல் கோபூஜை, இரண்டாம் கால யாகபூஜை முடிந்து , பகல்11.15 மணிக்கு கோயில் விமானங்களுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஈஸ்வரன் கோயில் கட்டியப்பா குருக்கள் நடத்தி வைத்தார். பரமக்குடி பிராமண சமாஜம், சங்கர விநாயகர் இளைஞர் மன்றம் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

* பத்திரகாளியம்மன் கோயில்: கீழக்கரை அருகே மாவிலாதோப்பு கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, காலை 9:30 மணிக்கு மேல் வேதமந்திரங்கள் முழங்க, திண்டுக்கல் சவுந்திரராஜன் பட்டர் தலைமையில் கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து பத்திர காளியம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாவிலாதோப்பு நாடார் உறவின்முறை சங்க நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

* முதுகுளத்தூர் அருகே அலங்கானூர் முனியப்பசாமி கோயிலில் நேற்று கணபதி ஹோமம், கோமாதா பூஜை உட்பட 6 கால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடந்தது. விளையாட்டு துறை அமைச்சர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் தர்மர், அலங்கானூர் ஊராட்சி தலைவர் பொன்னரியாள் முன்னிலை வகித்தனர். விழாவில் அன்னதானம், நாடகம் நடந்தது. நிகழ்ச்சியில் அலங்கானூர் ஜமாத் தலைவர் அலிஅக்பர், தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் அரக்காசு உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar