வால்பாறை: வால்பாறையில் ஷீரடி சாய்பாபா துவாரகாமாயி தியான மந்திர் திறப்பு விழா நடந்தது. நகை கடை வீதியியில் நேற்று காலை 10.45 மணிக்கு நடந்த விழாவில் டாக்டர் முனுசாமி, முத்துசாமி, கேபிள்அழகிரி ஆகியோர் திரு உருவ சிலையை திறந்துவைத்தனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சாய் சிவக்குமார், சாய் ரமேஷ், சாய் ஏகசிவநாதன் ஆகியோர் செய்திருந்தனர். திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.