மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லூர் ஏரிக்கரையில் உள்ள ஆதிசிவனுக்கு கணபதி பூஜை, மூல மந்திர ஹோமம் நடந்தது. சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். சுவாமி ஆதிகேசவனுக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் திருக் கல்யாணத்தை திருவண்ணாமலை ரமணா ஆசி ரமத்தைச் சேர்ந்த திவஸ்பதி, நாகேந்திரகுமார் குருக்கள் நடத்தினர். பாண்டியன், பாரதிராஜா உட்பட பலர் கலந்துக் கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.