Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிசிவனுக்கு திருக்கல்யாணம் சபரிமலையில் சேவை; 82 மாணவர்கள் பயணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் யானைக்கு சிறப்பு நல்வாழ்வு முகாம் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2014
12:12

சேலம் : சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், மதுரை அழகர் கோவில் யானை ஆண்டாளுக்கு, சிறப்பு நல்வாழ்வு முகாமை, கலெக்டர் துவக்கி வைத்தார். தமிழக கோவில்கள், மடங்கள், வனத்துறையால் பராமரிக்கப்படும் யானைகள் பயன் பெறும் வகையில், ஆண்டுதோறும், யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு தேக்கம்பட்டி, பவானி ஆற்றில், வனப்பத்திரகாளியம்மன் கோவில் அருகில், இந்த முகாம் நடந்தது. இதில், 52 யானைகள் பங்கேற்றன. முகாமில் கலந்து கொள்ளாத, 11 கோவில் யானைகள், 37 வனத்துறை யானைகளுக்கு, அவற்றின் இருப்பிடத்துக்கே பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு கோவை, தேக்கம்பட்டி வனப்பத்திரகாளியம்மன் கோவிலில், நேற்று முகாம் துவங்கியது. இதில், 40க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொண்டன. இந்த ஆண்டு, 40க்கும் மேற்பட்ட யானைகள், முகாமில் கலந்து கொள்ளவில்லை. சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி, மதுரை அழகர் கோவில் யானை ஆண்டாள் ஆகியவையும் கலந்து கொள்ளவில்லை.

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், மதுரை அழகர் கோவில் யானை ஆண்டாள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கான நல்வாழ்வு முகாமை, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் நேற்று துவக்கி வைத்தார். முகாம், ஜன., 27ம் தேதி வரை, 48 நாட்கள் நடக்கிறது.கால்நடை மருத்துவர்களை கொண்டு முழுமையான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினரால் உணவு வழங்கப்பட உள்ளது. தினமும், 20 கரும்பு, ஒன்பதரை கிலோ சோளத்தட்டு, எட்டு தென்னம்மட்டை, ஐந்து வாழைப்பழம், எட்டு வாழைத்தண்டு, 12 கிலோ கேழ்வரகு, நான்கு கிலோ கொள்ளு, இரண்டு கிலோ புழுங்கல் அரிசி, இரண்டு தேங்காய், 100 கிராம் உப்பு, 100 கிராம் வெல்லம் என்ற வகையில் உணவு வழங்கப்பட உள்ளது.இதேபோல், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கும், நல்வாழ்வு முகாம் துவங்கப்பட்டது. குரும்பப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., செல்வராஜ், வன பாதுகாவலர் அருண், மாவட்ட வன அலுவலர் ஜெயபாலன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar