பதிவு செய்த நாள்
15
டிச
2014
12:12
நாமக்கல் : நாமக்கல் ஆஞ்சயேநர் கோவிலில், வரும், 21ம் தேதி, ஜெயந்தி விழா கோலாகலமாக நடக்கிறது.
நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்று, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு விழா, டிசம்பர், 21ம் தேதி நடக்கிறது. அன்றை தினம், மார்கழி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், 5,000 லிட்டர் பாலை கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.அன்று காலை, 10 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், 1,008 வடமாலை சாற்றப்படுகிறது.
தொடர்ந்து ஸ்வாமிக்கு தங்ககசவம் அணிவிக்கப்படுகிறது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழா ஏற்பாடுகளை, ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில், உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் சபர்மதி ஆகியோர் செய்துள்ளனர்.