திருப்பதி: திருமலையில், இன்று முதல், சுப்ரபாத சேவைக்கு பதில், திருப்பாவை சேவை துவங்கப்பட உள்ளது. திருமலையில் ஆண்டுதோறும், மார்கழி மாதம், 30 நாட்களும், தினசரி நடைபெறும் சுப்ரபாத சேவையை ரத்து செய்து, ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவையை நடத்துவது வழக்கம். அதன்படி, மார்கழி மாதம், முதல் நாளான இன்று முதல், திருப்பாவை பாராயணம் துவங்க உள்ளது. 30 நாட்களுக்கு சுப்ரபாத பாராயணம், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.